தை3வமேவாப1ரே யஞ்ஞம் யோகின: ப1ர்யுபா1ஸதே1 |
ப்3ரஹ்மாக்3னாவப1ரே யஞ்ஞம் யஞ்ஞேனைவோப1ஜுஹ்வதி1 ||25||
தெய்வம்--—தேவலோக தெய்வங்களை; ஏவ--—உண்மையில்; அபரே—--மற்றவர்கள்; யஜ்ஞம்—--தியாகம்; யோகினஹ---ஆன்மீக பயிற்சியாளர்கள்; பர்யுபாஸதே--—வழிபடுகின்றனர்; ப்ரஹ்ம--—உயர்ந்த உண்மையின்; அக்னௌ--—தீயில்; அபரே—--மற்றவர்கள்; யஞ்ஞம்—--தியாகம்; யஞ்ஞேன---தியாகத்தால்; ஏவ—-உண்மையில்; உபஜுஹ்வதி---அர்பணிக்கின்றனர்
BG 4.25: சில யோகிகள் தேவலோக தெய்வங்களுக்கு பொருள் காணிக்கைள் அளித்து வழிபடுகிறார்கள். மற்றவர்கள் பரம சத்தியத்தின் நெருப்பில் சுயத்தை தியாகம் செய்து பரிபூரணமாக வணங்குகிறார்கள்.
Start your day with a nugget of timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
யஞ்ஞம் அல்லது யாகம் என்பது தெய்வீக உணர்வில் பரமாத்மாவுக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும். இருப்பினும், மக்கள் தங்கள் புரிதலில் வேறுபடுகிறார்கள், இதன் விளைவாக, வேறுபட்ட உணர்வுடன் வெவ்வேறு நடத்தைகளில் தியாகம் செய்கிறார்கள். குறைந்த புரிதல் மற்றும் பொருள் வெகுமதிகளை விரும்பும் நபர்கள் தேவலோக தெய்வங்களுக்கு காணிக்கை செலுத்துகிறார்கள்.
யாகத்தின் அர்த்தத்தை ஆழமாகப் புரிந்து கொண்ட மற்றவர்கள், தங்கள் சுயத்தையே பரமாத்மாவுக்கு தியாகம் செய்கிறார்கள். இது ஒருவரின் ஆன்மாவை கடவுளுக்கு வழங்குதல் என்று பொருள்படும் ஆத்1ம ஸமர்ப1ணம் அல்லது ஆத்1மாஹுதீ 1 என்று அழைக்கப்படுகிறது. யோகி ஸ்ரீ கிருஷ்ண ப்ரேம் இதை நன்றாக விளக்கினார்: 'புழுதியும், தழும்பும் நிறைந்த இந்த உலகில், தெய்வீக அன்பின் சுடரில் ஆன்மாவை கடவுளுக்கு வழங்குதம் போது, ஒரு உள்ளார்ந்த திடீர் எழுச்சி ஏற்படுகிறது, இது கருணை, ஏனென்றால் எந்த உண்மையான ஆத்மாஹுதீயும்--ஆன்மாவை கடவுளுக்கு வழங்குதலும் வீணாக போகாது.' ஆனால் ஒருவரின் சுயத்தை தியாகம் செய்யும் செயல்முறை என்ன? கடவுளிடம் தன்னை முழுமையாக ஒப்படைப்பதன் மூலம் இது செய்யப்படுகிறது. அத்தகைய சரணாகதிக்கு ஆறு அம்சங்கள் உள்ளன, அவை 18.62 வசனத்தில் விளக்கப்பட்டுள்ளன. இங்கு, மக்கள் செய்யும் பல்வேறு வகையான தியாகங்களை ஸ்ரீ கிருஷ்ணர் தொடர்ந்து விளக்குகிறார்